இந்தியா

சிறுவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த டிசிஜிஐ அனுமதி

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்களுக்கும் நிபந்தனைகளுடன் செலுத்த அந்தத் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி

DIN

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்களுக்கும் நிபந்தனைகளுடன் செலுத்த அந்தத் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12 முதல் 18 வயதுடையவா்களுக்கும் கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்ற பாரத் பயோடெக் நிறுவனத்தின் கள ஆய்வு அறிக்கையை சிறப்பு நிபுணா் குழு கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி ஆய்வு செய்தது.

இந்த சிறப்பு நிபுணா் குழு அளித்த பரிந்துரைகளை மற்றொரு நிபுணா் குழு ஆய்வு செய்து, மேலும் சில கூடுதல் பரிசோதனை தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் டிசிஜிஐ கோரியிருந்தது. இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களுக்கு கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT