இந்தியா

நாட்டில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 387 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 7,286 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 387 பேர் பலியாகியுள்ள நிலையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,79,520 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 3,42,23,263 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77,032 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை 141 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வில் முன்னணியில் எஸ்.ஏ. கல்விக் குழுமம்!

கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் அர்ப்பணிப்பு!

பிகாரில் இளைஞர்களுக்கு ரூ.62,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும்! - முதல்வர் உறுதி

விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறதா?

SCROLL FOR NEXT