கோப்புப்படம் 
இந்தியா

தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றுள்ளார். 

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றுள்ளார். 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு 
நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாபில் தேர்தல் பேரணியில் கலந்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென இத்தாலி சென்றுள்ளார். எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில், கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இதுகுறித்து, 'ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றுள்ளார். பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் இதுகுறித்து தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவும், சுமார் ஒரு மாத காலம் ராகுல் காந்தி வெளிநாடு பயணம் சென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT