இந்தியா

ரூ. 64,180 கோடியில் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்த தற்சார்பு திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

DIN

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இதில்  தற்சார்பு இந்தியா அல்லது சுயசார்பு இந்தியா திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டம் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக கூறிய அமைச்சர், ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் (சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். 

இது தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். 

இதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 64,180 கோடி ரூபாயில் புதிய மத்திய நிதியுதவித் திட்டமான சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கிகளுக்கே இந்த நிலைமையா? வாடிக்கையாளர் ஆள் மாறாட்ட மோசடி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்!

3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம்! - உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்த மத்திய அரசு

கை நம்மைவிட்டு போகாது; புது அடிமையைத் தேடும் பாஜக! உதயநிதி

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு: மாணவிகளுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT