முகப்பு
தில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டன
இந்தியா

தில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டன

விவசாயிகளுக்கு ஆதரவாக சக்கா ஜாம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக தில்லியில் மூடப்பட்டிருந்த 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.

இந்தியா

தில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டன

விவசாயிகளுக்கு ஆதரவாக சக்கா ஜாம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக தில்லியில் மூடப்பட்டிருந்த 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
தில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டன
பகிர்:


விவசாயிகளுக்கு ஆதரவாக சக்கா ஜாம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக தில்லியில் மூடப்பட்டிருந்த 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லியில் மாண்டி ஹவுஸ் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் காலை முதலே மூடப்பட்டிருந்தன.

இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 3 மணிக்கு நிறைவடைந்ததை அடுத்து, மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
 

முழு கட்டுரையைப் படிக்க →