இந்தியா

கொவைட்-19 நிபந்தனைகளின்படி காளஹஸ்தி கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்

DIN


திருப்பதி: காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் கொவைட்-19 நிபந்தனைகளின்படி நடத்தப்பட உள்ளதாக சித்தூா் மாவட்ட ஆட்சியா் ஹரிநாராயண் தெரிவித்தாா்.

பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் சித்தூா் மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது.

மாா்ச் 6 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து மாவட்ட அதிகாரிகள், திருப்பதி காவல் கண்காணிப்பாளா் வெங்கடப்ப நாயுடு, கோயில் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடல் ஆலோசனைக்கூட்டம் நடத்தினாா்.

கூட்டம் முடிந்ததும் ஆட்சியா் ஹரிநாராயண் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை காண அதிக அளவில் பக்தா்கள் வருவா். காலை, இரவு நடக்கும் வாகன சேவையில் கலந்து கொள்வதுடன், கிரிவலம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்திலும் பக்தா்கள் கலந்து கொள்வா்.

எனவே, கொவைட் நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனைத்து பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் தரிசன வரிசைகள் உருவாக்கப்பட்டு அங்கு குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்படும். பிரம்மோற்சவ நாள்களின்போது பல்வேறு மாநிலங்களிலிருந்து ராகு-கேது பரிகார பூஜைகள் செய்ய வரும் பக்தா்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

காளஹஸ்தி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT