முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

இலங்கை, நேபாளத்தில் கட்சியை விரிவுபடுத்த அமித் ஷா திட்டம்: திரிபுரா முதல்வர் பேச்சு

அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கட்சியை விரிவுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.

இந்தியா

இலங்கை, நேபாளத்தில் கட்சியை விரிவுபடுத்த அமித் ஷா திட்டம்: திரிபுரா முதல்வர் பேச்சு

அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கட்சியை விரிவுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
கோப்புப்படம்
பகிர்:

அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கட்சியை விரிவுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப், அகர்தலாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசினார். 

அப்போது பேசிய அவர், 'கட்சியின் தலைவராக அமித் ஷா இருந்தபோது நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. அவர் எந்த மாநிலத்திற்குச் செல்கிறாரோ அங்கு கட்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். 

அப்போது குறுக்கிட்ட மாநில பாஜக அமைச்சர், நேபாளமும் இலங்கையும் இன்னும் எஞ்சியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் கூறிய முதல்வர் பிப்லாப் குமார் தேப், 'இலங்கை மற்றும் நேபாளத்திற்கும் கட்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று அமித் ஷா கூறினார். அங்கேயும் நாம் வெற்றி பெற வேண்டும்' என்று கூறியுள்ளார். இப்போது இவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

முன்னதாக, 'மகாபாரதம் காலத்திலேயே இன்டர்நெட், செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டுள்ளது', 'இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதியின் பின்னால் அலையாமல் பீடா கடை வைத்தோ அல்லது மாடு மேய்த்தோ பிழைக்கலாம்' என பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்குச் சொந்தக்காரர் பிப்லாப் குமார் தேப் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →