முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 4,787 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை 4,787 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை 4,787 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,76,093 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,853 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,85,261 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 51,631 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் அங்கு 38,013 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →