முகப்பு
இந்தியா

ஒடிசாவில் டிராக்டர் விபத்து: 5 பேர் பலி, 41 பேர் காயம்

ஒடிசாவில் டிராக்டர் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவில் டிராக்டர் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானார்கள்.
ஒடிசா மாநிலம், மயூர்பாஞ் மாவட்டத்தில் நடனக்குழுவினர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டிராக்டரில் நேற்றிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 
இவர்கள் வந்துகொணடிருந்த டிராக்டர் தீபாஷாஹி எனும் இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →