இந்தியா

உ.பி.யில் சட்டவிரோதமாக மது விற்பனை: 4 பேர் கைது

ANI

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காவல்துறையினர் அறிக்கையின்படி, 

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 8,50,000 போலி மதுபானங்களும், பல்வேறு பிரீமியம் மதுபான பிராண்டுகளில் 2,60,000 போலி லேபிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் உ.பி., ராஜஸ்தான், உத்தரகண்ட், தில்லி ஆகிய மாநிலங்களில் இருந்து சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, தொழிற்சாலை, இயந்திரங்கள் சட்டவிரோத பாட்டில், மூடிகள் மற்றும் பல்வேறு பிராண்டுகளின் லேபில்கள் தயாரிப்பதாக தகவல்கள் கிடைத்தன. 

இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

SCROLL FOR NEXT