முகப்பு
இந்தியா

உ.பி.யில் சட்டவிரோதமாக மது விற்பனை: 4 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காவல்துறையினர் அறிக்கையின்படி, 

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 8,50,000 போலி மதுபானங்களும், பல்வேறு பிரீமியம் மதுபான பிராண்டுகளில் 2,60,000 போலி லேபிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் உ.பி., ராஜஸ்தான், உத்தரகண்ட், தில்லி ஆகிய மாநிலங்களில் இருந்து சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, தொழிற்சாலை, இயந்திரங்கள் சட்டவிரோத பாட்டில், மூடிகள் மற்றும் பல்வேறு பிராண்டுகளின் லேபில்கள் தயாரிப்பதாக தகவல்கள் கிடைத்தன. 

இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.