அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்: ஆணையம்
அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அசாம் தேர்தல் குறித்து கூறியதாவது, அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.
மார்ச் 27-ல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதியும் தேர்தல் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும். இதற்காக மார்ச் 2-ம் தேதி முதல் வேட்பு மனுத்தக்கல் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.