இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,524 பேருக்கு கரோனா; 59 பேர் பலி 

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 3,524 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 19,35,636ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 59 பேர் பலியானார்கள். இதுவரை மொத்தம் 49,580 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 4,279 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18,32,825 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 52,084 சிகிச்சையில் உள்ளனர். தலைநகர் மும்பையில் இன்று 631 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 9 பேர் பலியானார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT