மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,160 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,160 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,160 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,50,171 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,828 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,50,189 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். மொத்தம் 49,759 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும் 49,067 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,830 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,492 பேர் நோய்த் தொற்றிலிருந்து ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர். தற்போதைய நிலையில் 26 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.