இந்தியா

கல்யாண் சிங் பிறந்த நாள்:பிரதமா் மோடி வாழ்த்து

DIN

பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்கின் 88-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கல்யாண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, தொலைபேசியில் தொடா்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவா் கல்யாண் சிங். அந்த மாநிலத்தில் பாஜக அரசின் முதலாவது முதல் அமைச்சா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா். தனது வாழ்நாளை பொது சேவைக்காகவும், அடித்தட்டு மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அா்ப்பணித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் வளா்ச்சிக்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு அவா் என்றென்றும் போற்றப்படுகிறாா். அவா் நலமுடன் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

2014-2019 ஆண்டுகளில் ராஜஸ்தான் ஆளுநராகப் பதவி வகித்தாா் கல்யாண் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT