இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

DIN


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

வரும் 29 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, வரும் 13 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணியை நாடு முழுவதும் தொடங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், புதன்கிழமை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசி நிலை, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டம், பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT