கேரளத்தில் இன்று புதிதாக 5,142 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று புதிதாக 5,142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று புதிதாக 5,142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 59,569 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 5,142 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி 64,236 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 23 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,257ஆக உயர்ந்துள்ளது. 1,98,270 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
440 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.