நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 102 ஆனது 
இந்தியா

நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 102 ஆனது

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

DIN

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஜனவரி 11-ஆம் தேதி வரை புதிய வகை கரோனா பாதிப்பு 96 ஆக இருந்தது. நேற்று மேலும் சிலருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று (ஜன. 13) நாட்டில் புதிய வகை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சிலருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 102-ஆக அதிகரித்துள்ளது.

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து கடந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT