இந்தியா

கரோனா முன்களப் பணியாளர்களுக்காக நலத் திட்டம்: கேஜரிவால்

DIN


கரோனா முன்களப் பணியாளர்களுக்காக புதியதாக நலத்திட்டம் தொடங்கவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கரோனா முன்களப் பணியாளரான ஹிதேஷ் குப்தா என்ற மருத்துவர் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தாரை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம். மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன்.

தில்லி மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT