தில்லியில் பறவைக் காய்ச்சல் 50% குறைந்துள்ளது: சுகாதாரத்துறை 
இந்தியா

தில்லியில் பறவைக் காய்ச்சல் 50% குறைந்துள்ளது: சுகாதாரத்துறை

தில்லியில் பறவைக் காய்ச்சல் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மற்றும் விலங்குகள் நலத் துறை தெரிவித்துள்ளது.

DIN

தில்லியில் பறவைக் காய்ச்சல் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மற்றும் விலங்குகள் நலத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தில்லி விலங்குகள் நல வாரிய இயக்குநர் ராகேஷ் சிங், தில்லி நகரம் முழுதும் பறவைக் காய்ச்சல் தொடர்பாக எழும் புகார்கள் பாதியளவு குறைந்துள்ளது. எனினும் பறவைக் காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தில்லியில் 1,200 பறவைகள் இதுவரை இறந்துள்ளன. ஜனவரி 20-ஆம் தேதி வரை விலங்குகள் நலவாரியத்திற்கு 720 புகார்கள் வந்துள்ளன. புகார்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழு பறவைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்று கூறினார்.

பறவைகள் இறந்தால் அதனை வெறும் கைகளால் தொட வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 201 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் 21 பறவைகளுக்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. 150 மாதிரிகளுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT