முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,779 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,779 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,779 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,779 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,03,657ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 44,926 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 50 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,684ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,419 பேர் குணமடைந்தனர். 
இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,06,827ஆக உயர்ந்துள்ளது. 2,13,414 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments