முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,697 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,697 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,06,354 ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று 56 பேர் பலியானார்கள். இதையடுத்து பலி எண்ணிக்கை 50,740ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,694 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,10,521ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது 43,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,678 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும் 1,993 பேர் இன்ஸ்ட்டியூட் கண்காணிப்பிலும் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments