முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 6,960 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 6,960 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 6,960 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 61,066 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 6,960 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு பண்ணிக்கை 8,83,540ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 72,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 23 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,587ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 5,283 பேர் குணமடைந்தனர். இதுவரை 8,08,377 பேர் குணமடைந்துள்ளனர். 2,11,824 கண்காணிப்பில் உள்ளனர். 407 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments