இந்தியா

தில்லி வன்முறை: வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவசாயப் பிரதிநிதிகளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

DIN

தில்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தில்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தில்லியில் குடியரசு நாளன்று (செவ்வாய்க்கிழமை) டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காவல்துறை கட்டுப்பாட்டை மீறி உள்நுழைந்தது மட்டுமின்றி செங்கோட்டையை அவமதித்ததால் சம்மந்தப்பட்ட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தில்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வெளிநாட்டினருக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில்  அனைத்து விமான நிலையங்களிலும் இந்த பட்டியலை அனுப்பவும் காவல்துறை முடிவெடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காவல்துறை இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 22 பேருக்கு விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT