முகப்பு
இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 140 பேருக்கு கரோனா தொற்று

தலைநகா் தில்லியில் இன்று 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
கோப்புப்படம்
பகிர்:

தலைநகா் தில்லியில் இன்று 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 140 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  
இதன் மூலம், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,096-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60,695 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 38,746 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 21,949 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் இன்று 4 போ் உயிரிழந்தனா். 
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,853-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 211 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,22,882-ஆக உயா்ந்துள்ளது. 
தற்போது 1,361 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 548 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 7,235 படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments