நாட்டில் 33.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக முழு விவரம்
நாட்டில் மொத்தம் 33.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்தம் 33.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி:
இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணி வரை 33,96,28,356 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு 7 மணி வரையிலான தகவலின்படி இன்று (வியாழக்கிழமை) மட்டும் 38,17,661 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
18-44 வயதினரில் இன்று 21,80,915 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 84,107 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தமிழகம் உள்பட மொத்தம் 8 மாநிலங்களில் 18-44 வயதினர் பிரிவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரியாக விவரம்
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,02,16,149
இரண்டாவது தவணை - 72,69,153
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,75,28,893
இரண்டாவது தவணை - 95,48,256
18-44 வயதினர்:
முதல் தவணை - 9,38,32,139
இரண்டாவது தவணை - 22,68,517
45-59 வயதினர்:
முதல் தவணை - 8,91,67,857
இரண்டாவது தவணை - 1,68,22,005
60 வயதுக்கு மேற்பட்டோர்
முதல் தவணை - 6,83,27,397
இரண்டாவது தவணை - 2,46,47,990
மொத்தம்
முதல் தவணை - 27,90,72,435
இரண்டாவது தவணை - 6,05,55,921