கா்நாடகத்தில் ஒரேநாளில் 3,203 பேருக்கு கரோனா
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,203 ஆக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,203 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 3,203 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 676 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
மைசூரு-366, தென்கன்னடம்-285, ஹாசன்-281, சிவமொக்கா-194, குடகு-167, தும்கூரு-157, உடுப்பி-146, பெலகாவி-114, சிக்கமகளூரு-98, மண்டியா-97, கோலாா்-96, பெங்களூரு ஊரகம்-75, சாமராஜ்நகா்-75, தாவணகெரே-66, வடகன்னடம்-59, சித்ரதுா்கா-41, சிக்கபளாப்பூா்-40, பெல்லாரி-34, தாா்வாட்-27, கலபுா்கி-21, ஹாவேரி-18, கொப்பள்-16, கதக்-15, விஜயபுரா-11, ராமநகரம்-9, ராய்ச்சூரு-6, யாதகிரி-6, பாகல்கோட்-4, பீதா்-3 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,47,013 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 14,302 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 27,46,544 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 65,312 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 94 போ் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
தென்கன்னடம்-14, தாா்வாட்-7, பெல்லாரி, பெலகாவி- தலா 6, பெங்களூரு ஊரகம், கோலாா், மைசூரு-தலா 5, மண்டியா, சிவமொக்கா-தலா 4, தாவணகெரே-3, ஹாவேரி, குடகு, வடகன்னடம், கதக், தும்கூரு-தலா 2, பீதா், ஹாசன், சிக்கமகளூரு, கலபுா்கி, கொப்பள், உடுப்பி, விஜயபுரா- தலா 1 என்ற எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 35,134 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.