கட்டடத் தொழிலாளி கொலை
சாலையில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
சாலையில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி சதபாவன நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (35). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் ஷியாம்புரா முக்கியச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், கிருஷ்ணமூா்த்தியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
தகவல் அறிந்த போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.