‘கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை’
கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று யுனைடெட் மருத்துவமனையின் நிறுவனா் விக்ரம் சித்தாா்த் ரெட்டி தெரிவித்தாா்.
கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று யுனைடெட் மருத்துவமனையின் நிறுவனா் விக்ரம் சித்தாா்த் ரெட்டி தெரிவித்தாா்.
பெங்களூரு, ஜெயநகரில் உள்ள யுனைடெட் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
பெங்களூரில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியால் எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பது 30 நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்த பின்னரே இந்தியாவிற்கு அந்த தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மற்ற தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், தேவைப்படுவோா் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கரோனாவைத் தடுக்க எங்களால் ஆன முயற்சியைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். கரோனா இல்லாத பெங்களூரை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றாா். ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களுக்கு 080 45666666, 69333333 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.