முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு எதிரான போரில் முடிந்தவற்றை உலகுடன் பகிர்ந்துள்ளோம்: பிரதமர் மோடி

கரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களால் முடிந்தவற்றை நாங்கள் உலகுடன் பகிர்ந்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்தியா

கரோனாவுக்கு எதிரான போரில் முடிந்தவற்றை உலகுடன் பகிர்ந்துள்ளோம்: பிரதமர் மோடி

கரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களால் முடிந்தவற்றை நாங்கள் உலகுடன் பகிர்ந்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:


கரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களால் முடிந்தவற்றை நாங்கள் உலகுடன் பகிர்ந்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

கோவின் உலகளாவிய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பங்கேற்றார். அனைத்து நாடுகளிலும் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

இதன்பிறகு அவர் பேசியது:

“கரோனா பெருந்தொற்றுக்கு இணையாக 100 ஆண்டுகளில் எந்தவொரு பெருந்தொற்றும் ஏற்பட்டதில்லை. எத்தகைய வலிமையான நாடாக இருந்தாலும் எந்தவொரு நாட்டினாலும் இந்த சவாலை தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது.

அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களால் முடிந்தவற்றை உலகுடன் பகிர முயற்சித்துள்ளோம்.

கரோனாவுக்கு எதிரான எங்களது போரில் தொழில்நுட்பம் முக்கியமானது. அதிர்ஷ்டவசமாக மென்பொருள் துறையின் வளங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. பெருந்தொற்றிலிருந்து வென்று மீண்டு வர தடுப்பூசி ஒன்றே பெரும் நம்பிக்கை.

தடுப்பூசிக் கொள்கைக்கான திட்டத்தை வகுக்கும்போதிலிருந்தே முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையைக் கையாள நாங்கள் முடிவு செய்தோம்.

ஒட்டுமொத்த உலகையும் ஒரே குடும்பமாகக் கருதுவதே இந்திய நாகரிகம். பலரது மனதில் இந்தத் தத்துவத்தின் அடிப்படை உண்மையை பெருந்தொற்று காலம் உணரச் செய்துள்ளது.

இதனால்தான், ‘கோவின்’ என அழைக்கப்படும் கரோனா தடுப்பூசிக்கான எங்களது தொழில்நுட்ப தளத்தை வெளிப்படைத்தன்மையுடன் உருவாக்கியுள்ளோம்.”

முழு கட்டுரையைப் படிக்க →