கோப்புப்படம் 
இந்தியா

சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் நாளை(ஜூலை 6) சந்திப்பு

பஞ்சாபில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

DIN

பஞ்சாபில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோருக்கு இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

மாநிலத்தில் கட்சித் தலைவரான நவ்ஜோத் சிங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத காரணத்தால், ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவியதையடுத்து கடந்த வாரம் சித்துவுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தில்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை கட்சி மேலிடம் வேகப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி

தில்லியில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகக்குளிரான ஜனவரி காலைப்பொழுது பதிவு

என்ஆா்ஐ மருத்துவா் தம்பதியினரிடம் நடத்தப்பட்ட ரூ.14.85 கோடி மோசடியில் ரூ.1.9 கோடி முடக்கம்

உங்க கனவ சொல்லுங்க திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT