இந்தியா

நட்டாவுடன் புதிய அமைச்சர்கள் இன்று சந்திப்பு

DIN

புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை கட்சித் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2019-இல் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 36 பேர் புதியவர்கள்.

ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், சர்வானந்தா சோனோவால் மற்றும் பசுபதி குமார் பாரஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். 7 பெண் எம்.பி.,க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். மேலும் 7 இணை அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் ஜெ.பி. நட்டாவை கட்சித் தலைமையகத்தில் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT