தில்லியில் கனமழை: 16 நாள்கள் தாமதமாகத் தொடங்கியது பருவமழை 
இந்தியா

தில்லியில் கனமழை: 16 நாள்கள் தாமதமாகத் தொடங்கியது பருவமழை

தில்லியில் வழக்கமாக பருவமழை தொடங்கும் நாளை விட 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. தில்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

ANI


புது தில்லி: தில்லியில் வழக்கமாக பருவமழை தொடங்கும் நாளை விட 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. தில்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

வழக்கமாக தில்லியில் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி வந்த நிலையில், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின் 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. கடைசியாக 2002 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி தாமதமாகத் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை காலை தெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, தில்லியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வழக்கமாக தில்லியில் ஜூன் 27ஆம் தேதி பருவமழை தொடங்கும். நாடு முழுவதும் பருவமழை ஜூலை 8ஆம் தேதி பரவலாகப் பெய்யும். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தில்லியில் பருவமழை தொடங்கியது, நாடு முழுவதும் ஜூன் 29ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.

முன்னதாக, தில்லியில் ஜூன் 15ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக இன்று தொடங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT