தென் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை
கரோனா பரவல் குறித்து தென் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாதென் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை
கரோனா பரவல் குறித்து தென் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கரோனா பரவல் குறித்து தென் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில்,சில மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தென் மாநிலங்களான கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசிக்கவுள்ளார்.
இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது கரோனா தடுப்பூசி அதிகளவில் மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.