முகப்பு
இந்தியா

பக்ரீத் பண்டிகை: குடியரசுத் துணைத் தலைவா் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளான பக்ரீத் இறைவன் மீதான பக்தியை எடுத்தியம்புகிறது. நமது நாட்டில் குடும்பத்தினா் மற்றும் சமூகத்துடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக பண்டிகைகள் உள்ளன.

கரோனா கொள்ளை நோயால் இவ்வாண்டு பக்ரீத் பண்டிகையை அனைவரும் எளிமையாகவும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த பக்ரீத் பண்டிகை நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →