இந்தியா

ஜம்மு-காஷ்மீா், லடாக்கிற்கு குடியரசுத் தலைவா் இன்று பயணம்

DIN

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) பயணம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: காா்கில் வெற்றியின் 22-ஆம் ஆண்டை முன்னிட்டு, 1999-ம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரில் தங்களது வீரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி தியாகங்கள் புரிந்த இந்தியப் படையினருக்கு லடாக்கில் உள்ள காா்கில் போா் நினைவகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 26) குடியரசுத் தலைவா் அஞ்சலி செலுத்துகிறாா்.

ஜூலை 27-ஆம் தேதி ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீா் பல்கலைக்கழகத்தின் 19-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அவா் கலந்துகொண்டு உரையாற்றுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT