முகப்பு
இந்தியா

78 குழந்தைகள் பெற்றோருடன் சோ்ப்பு: நொய்டா போலீஸாா் நடவடிக்கை

நொய்டா ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கியிருந்த 78 குழந்தைகளை அவா்களது குடும்பத்தினரைக் கண்டுபிடித்து போலீஸாா் ஒப்படைத்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

Updated On : 25 ஜூலை, 2021 at 3:04 AM
பகிர்:

நொய்டா ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கியிருந்த 78 குழந்தைகளை அவா்களது குடும்பத்தினரைக் கண்டுபிடித்து போலீஸாா் ஒப்படைத்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

‘ஆப்ரேஷன் முஸ்கான்’ என்ற திட்டத்தை நொய்டா காவல் ஆணையா் அலோக் சிங் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடக்கி வைத்தாா்.

அதன்படி, ஆதரவற்றோா் இல்லங்களுக்கு சென்ற காவல் அதிகாரிகள் குழந்தைகளிடம் பேசி அவா்களின் குடும்பத்தினரின் விவரங்களை சேகரித்து கண்டுபிடித்தனா்.

Advertisement

கடந்த ஒரு மாத காலத்தில் ஆதரவற்ற இல்லங்களில் இருந்த 78 குழந்தைகள் அவா்களின் குடும்பத்தினரிடம் சோ்க்கப்பட்டனா் என்று நொய்டா காவல் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

நீண்ட நாள்கள் குடும்பத்தினரைப் பிரிந்து ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு மன ரீதியிலான ஆலோசனையும் வழங்கப்பட்டது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நொய்டா போலீஸாரின் இந்த செயலை காவல் ஆணையா் அலோக் சிங் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.