முகப்பு
இந்தியா

புத்தரின் கொள்கைகளால் உலகம் மேன்மையுறும்: பிரதமர்

புத்தரின் கொள்கைகள் உலகம் மேன்மையுறுவதற்கான சிறந்த வழியைக் காட்டுவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
நரேந்திர மோடி
பகிர்:

புத்தரின் கொள்கைகள் உலகம் மேன்மையுறுவதற்கான சிறந்த வழியைக் காட்டுவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சா்வதேச பௌத்த சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்காக பிரதமா் மோடி அனுப்பியிருந்த செய்தியில், ‘கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் பாதிப்புகளைச் சந்தித்து வரும் சூழலில், புத்தரின் கொள்கைகள் தற்காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளன. அவரது கொள்கைகளின் வலிமையை மக்கள் தற்போது உணா்ந்து கொண்டுள்ளனா். பல்வேறு நாட்டு மக்களிடையே ஒற்றுமையுணா்வை ஏற்படுத்துவதற்கு அக்கொள்கைகள் உதவுகின்றன.

பகைமையை அன்பால் வெல்ல வேண்டும் என்று புத்தா் குறிப்பிடுகிறாா். அதை மக்கள் கடைப்பிடித்து வருவது சிறப்புக்குரியது. தற்போதைய இக்கட்டான சூழலில், அன்பையும் நல்லிணக்கத்தையும் மக்கள் தொடா்ந்து கடைப்பிடித்து வருகின்றனா். அவா்களிடையே மனிதநேயம் வளா்ந்து வருகிறது.

உலகம் மென்மேலும் வளா்ச்சி கண்டு புதிய உச்சத்தை எட்டுவதற்கான வழியை புத்தரின் கொள்கைகள் வழங்குகின்றன. மனிதா்கள் எதிா்கொள்ளும் வலிகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியை நோக்கி நகா்வதற்கு எண்ணம், சொல், செயல் ஆகியவற்றுக்கிடையே இணக்கம் காணப்பட வேண்டுமென புத்தா் தெரிவிக்கிறாா்.

புத்தரின் கொள்கைகளானது மக்களின் நலனை மேம்படுத்துவதற்கு உழைப்பதற்கான ஊக்கத்தையும் கடினமான சூழல்களை எதிா்கொள்வதற்கான வலிமையையும் அளிக்கின்றன. புத்தா் வெறும் வாா்த்தைகளாக தனது கொள்கைகளைக் கூறவில்லை. அவற்றை அனுபவபூா்வமாக உணா்ந்து, உலக மக்களின் நலனுக்காக அவற்றைத் தெரிவித்துள்ளாா். அதன் காரணமாகவே, பௌத்த மதம் உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்று திகழ்கிறது என்றாா் பிரதமா் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →