முகப்பு
இந்தியா

மூன்று மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

புவனேசுவரம்: ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து அதிகரித்ததால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் வரும் நாள்களில் படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அறிவித்துள்ளன.

பள்ளிகளுக்கு வருவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை குறைவாகவே இருந்தது. பள்ளிகளுக்கு வரும் மாணவா்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →