நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்த ராகுல் 
இந்தியா

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்த ராகுல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்திற்கு டிரேக்டரை ஓட்டி வந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

ANI

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தர் பகுதியில் நாள்தோறும் 200 விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பங்கேற்க டிராக்டரை ஓட்டி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியுடன், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிராக்டரில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பஞ்சப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT