நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | தேர்தல் 2024: மோடிக்கு எதிராக நிறுத்தப்படுகிறாரா மம்தா?
இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிகளுக்கு இடையே காப்பீட்டு திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதன்பின், ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 11 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
அதேபோல், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.