பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு
பஞ்சாபில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அந்த மாநில அரசு இன்று (சனிக்கிழமை) அனுமதியளித்தது.
பஞ்சாபில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அந்த மாநில அரசு இன்று (சனிக்கிழமை) அனுமதியளித்தது.
பஞ்சாபில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது குறித்து வெளியான அரசு அறிவிப்பு:
- "கரோனா பரவலைத் தடுக்க பஞ்சாபில் கடந்த 20-ம் தேதி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
- ஆகஸ்ட் 2, 2021 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறை வெளியிடும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்."
இதையும் படிக்க | உத்தரகண்டில் ஆக. 1 முதல் பள்ளிகள் திறப்பு