முகப்பு
இந்தியா

பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு

​பஞ்சாபில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அந்த மாநில அரசு இன்று (சனிக்கிழமை) அனுமதியளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
கோப்புப்படம்
பகிர்:


பஞ்சாபில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அந்த மாநில அரசு இன்று (சனிக்கிழமை) அனுமதியளித்தது.

பஞ்சாபில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது குறித்து வெளியான அரசு அறிவிப்பு:

  • "கரோனா பரவலைத் தடுக்க பஞ்சாபில் கடந்த 20-ம் தேதி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் 2, 2021 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறை வெளியிடும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.