கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு எப்படி நலத்திட்டங்களை செயல்படுத்தப்போகிறது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அவர்களுக்குத் நலத் திட்டங்களை செயல்படுத்துவது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றில் ஏராளான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களுக்கு தமிழகம், கேரளம் போன்ற மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசும் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை அறிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு எப்படி நலத்திட்டங்களை செயல்படுத்தப்போகிறது என்று கேள்வி எழுப்பியது.
மேலும், அவர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.