இந்தியா

பெருந்தொற்றுக் காலம்: தனது ரூ.15 கோடி ஊதியத்தை விட்டுக் கொடுத்த முகேஷ் அம்பானி

PTI


புது தில்லி: கரோனா பெருந்தொற்றால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனது ஓராண்டு ஊதியமான ரூ.15 கோடியை விட்டுக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிதியாண்டில், கரோனா பெருந்தொற்றால் தனது நிறுவனத்தின் வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தாமாக முன் வந்து தனது வருவாயை விட்டுக் கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2020- 21-ஆம் ஆண்டு நிதியறிக்கையில், அம்பானியின் ஊதியம் - எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கடந்த நிதியாண்டில் அவருக்கு ஊதியம் என்று ரூ.15 கோடி கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இதையே அவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பெற்று வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT