நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் செலுத்திவிட்டு பில் வாங்கும்போது மோடி அரசின் பணவீக்கம் அதிகரித்துள்ளது குறித்து அறிவீர்கள். 'வரி வசூல்' தொற்றுநோயின் அலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ. 100 யைக் கடந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.