வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை கொண்டு வரும் கும்பல் கைது 
இந்தியா

வங்கதேசத்திலிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை கொண்டு வரும் கும்பல் கைது

இந்தியா - வங்கதேச எல்லையில், கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைத செய்துள்ளனர்.

IANS


புது தில்லி: இந்தியா - வங்கதேச எல்லையில், கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைத செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவுக்குள் கள்ள நோட்டை கொண்டு வரும் மிகப்பெரிய கும்பலைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 67வது பட்டாலியன் படை வீரர்கள், ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இருவருமே இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள ரூபாய் நோட்டுகள் வங்கதேசத்திலிருந்து துப்ரு வழியாக இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

SCROLL FOR NEXT