முகப்பு
இந்தியா

குறையும் கரோனா பாதிப்பு: உத்தரப்பிரதேசத்திலும் தளர்வுகள் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் 600க்குக் கீழ் குறைந்த நிலையில், பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூன் 2021, 12:38 pm IST
குறையும் கரோனா பாதிப்பு: உத்தரப்பிரதேசத்திலும் தளர்வுகள் அறிவிப்பு
பகிர்:


லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் 600க்குக் கீழ் குறைந்த நிலையில், பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் இந்த தளர்வுகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் புதன்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாள்களும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படும்.  அதே வேளையில், அனைத்து நாள்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 797 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் 14 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments