இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார்

DIN


முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.

தில்லியில் பாஜக தலைமையகத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.

இவரை வரவேற்று பியூஷ் கோயல் பேசியது:

"வரும் காலத்தில் உத்தரப் பிரதேச அரசியலில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது. கள யதார்த்தத்தில் தொடர்புடைய இவர், மாநிலத்தில் பிரபலமான தலைவர்." 

பாஜகவில் இணைந்த பிறகு ஜிதின் கூறியது:

"மக்கள் நலன்களுக்காக அல்லது மக்கள் நலன்களைப் பாதுகாக்க ஒருவரால் செயல்பட முடியவில்லையெனில் அரசியல் செய்வதிலோ அல்லது ஒரு கட்சியில் இருப்பதிலோ அர்த்தமில்லை. காங்கிரஸிலிருந்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைச் செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்தேன். அதனால்தான் பாஜகவில் இணைந்தேன். என்னுடைய செயல்பாடுகளே எனக்காகப் பேசும்." 

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரஸுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT