மும்பை மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை: மகாராஷ்டிர முதல்வர்
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை விரைந்து வெளியேற்றுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை விரைந்து வெளியேற்றுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.
முக்கிய சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்குவதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த மூன்று நாள்களுக்கு தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கரோனா சிகிச்சை முகாம்கள் மழை நீரால் பாதிக்கப்படாதவாறு கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.