சட்டீஸ்கரில் தாய், 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை 
இந்தியா

சட்டீஸ்கரில் தாய், 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை

சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், குடும்பச் சண்டையில் விரக்தி அடைந்த தாய் மற்றும் 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

PTI


ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், குடும்பச் சண்டையில் விரக்தி அடைந்த தாய் மற்றும் 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மகாசமுந்த் மற்றும் பெல்சோண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பலியான பெண் உமா சாஹு (45) என்பதும், பெம்சா கிராமத்தைச் சேர்ந்த இவருக்கும், இவரது கணவருக்கும் குடும்பச் சண்டை இருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில்தான், உமா தனது 10 வயது முதல் 18 வயதுடைய ஐந்து பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரயில் தண்டவாளப் பகுதிக்கு வந்து, அங்கே ரயில் வரும் போது, தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT