பிகாரில் மறுகூட்டலால் கரோனா பலி எண்ணிக்கை 9,300 ஆக உயர்வு 
இந்தியா

பிகாரில் கரோனா பாதிப்பை சரிபார்த்ததில் பலி எண்ணிக்கை 9,300 ஆக உயர்வு

பிகார் மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கையை சரிபார்த்து, மறுகூட்டல் செய்ததில், அதன் பலி எண்ணிக்கை புதன்கிழமையன்று 5,400-லிருந்து 9,300 ஆக உயர்ந்துள்ளது.

ANI

பிகார் மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கையை சரிபார்த்து, மறுகூட்டல் செய்ததில், அம்மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை புதன்கிழமையன்று 5,400-லிருந்து 9,300 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் இன்று கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புள்ளி விவரத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இதுவரை இல்லாத வகையில் நாட்டில் பலி எண்ணிக்கை 6,148 என்று இன்றைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், பிகாரில் நடத்தப்பட்ட மறுகூட்டல்தான்.

கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்குமாறு பாட்னா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, 38 மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு சரிபார்த்தது.

இதில், ஜூன் 7-ஆம் தேதி பிகாரில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,424 ஆக இருந்தது. ஆனால், கரோனா பலி எண்ணிக்கையை சரிபார்த்த பிறகு, அதாவது ஜூன் 8-ஆம் தேதியே இந்த எண்ணிக்கை 72.84% உயர்ந்து 9,375 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT